About Me

86/1, S.M.R Complex,Trivandrum Road, Palayamkottai, Tirunelveli, Tamilnadu 627 002, India
Agents Welfare is our first priority. If you want to contact, Use this emailid: liafitvl@gmail.com

About Us

We are LIC Tirunelveli Division agents federation headed by Mr. R. Sakravarthiraju. We unite to raise the voice of agents in this Division under the banner of LIAFI. LIAFI, an apolitical organisation was born on2nd October 1964 at Bombay. An all India level federation now headed by Mr. H.M. Jain.

நமது கோட்டத்தில் இந்த இயக்கம் பற்றி ஓர் அறிமுகம்.
இந்திய‍ாவின் தென்மாவட்டங்களில்சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி அன்று மிகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கனக்கான உயிரையும், உடமைகளையும் அழித்த அந்த நாளை நமது மக்கள் தமது வாழ் நாளில் மறக்கமாட்டார்கள்.
அது போல் நமது திருநெல்வேலி கோட்ட எல்.ஐ.சி முகவர்கள் மத்தியில் ஓர் ஓற்றுமை சுனாமி பேரலை எழுந்த நாளும் அந்நாளெ ஆகும். ஆம் அடிமை போல் முகவர்கள் நடத்தப்படுவதை எதிர்த்தும், நமது அடிப்படை உரிமைகளை பெறவும் நமக்கொரு நல்ல அமைப்பு வேண்டும் எனபதை உணர்ந்து, LIAFI என்ற இயக்கத்தில் தம்மை இனணத்துக்கொண்ட நாளும் அது தான்.
ஆம் அந்நாளில் தான் நமது கோட்ட முகவர்கள் ஒன்றுதிரண்டு பெரும்படையாக வந்து ஹோட்டல் ஆரியாஸில் நடைபெற்ற மாபெரும் நிகழ்சியில், அகில இந்திய அளவில் முகவர்களுக்கான மிகப்பெரிய இயக்கமாக விளங்கிய LIAFI யில் தன்னை இணைத்துக்கொண்டது.

நமது திருநெல்வேலி முகவர்களின் ஒற்றுமையை கேள்விப்பட்டு LIAFI இயக்கத்தின் அகில இந்திய தலைவர் திரு.H.M.ஜெயின் மற்றும் போது செயலாளர் திரு.N.கஜபதிராவ் ஆகியோர் அந்நிகழ்சியில் கலந்து கொண்டு, முன்னின்று நமது இணைப்பை நடத்தினார்கள் என்பது நமது ஒற்றுமைக்கு கிடைத்த அங்கிகாரம்.

அந்நிகழ்சியில் நமது கோட்ட LIAFI இயக்கத்தின் தலைவராக
திரு.R. சக்கரவர்த்திராஜு அவர்களும், செயலாளராக காலம்சென்ற
P.S. கோவிந்தசாமி அவர்களும் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுகொண்டுவரும் நமது கோட்ட LIAFI இயக்கத்தின் தற்போழுது தலைவராக திரு.R. சக்கரவர்த்திராஜு அவர்களும், செயலாளராக திரு.A.C.மனோகரனும், பொருளாளராக திரு. G. கிருஷ்ணனும் பதவி வகிக்கிறார்கள்.